சேறும், சகதியுமான சாலை

Update: 2023-06-28 18:11 GMT
கடலூர் மாநகராட்சி வண்ணாரப்பாளையம் மரியசூசை நகரில உள்ள சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் சேற்றில் வழுக்கி கிழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் புதிய தார்சாலை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்