குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-23 15:37 GMT

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், சீகம்பட்டி ஊராட்சி, வடக்கிப்பட்டியில் சுமார் 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்கள் தினமும் சீகம்பட்டியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று வருகின்றனர். இந்தநிலையில் வடக்கிப்பட்டியில் இருந்து சீகம்பட்டிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் நடந்து செல்லும் பொதுமக்கள், வேலைக்கு செல்வோர், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்