ஆபத்தான குழி

Update: 2023-06-28 09:57 GMT

சேலம்   57 - வது வார்டு களரம்பட்டி ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் மெயின் ரோட்டில் பராமரிப்பு காரணமாக மாநகராட்சி பணியாளர்களால் குழி தோண்டப்பட்டது. ஆறு மாத காலமாக குழியை மூடாமலும், பணிகள் எதுவும் நடக்காமலும் கிடப்பில் போட்டு உள்ளனர். இதனால் பள்ளி வாகனங்கள், வேலைக்கு செல்பவர்கள் தடுமாறி வருகின்றன. கடந்த சில நாட்களாக அந்த குழியில்  10 -க்கும் மேற்பட்டவர்கள் அதில் விழுந்துள்ளனர். எனவே இதை சரி செய்ய பலமுறை புகார் அளித்தும் அதற்கான வேலையை இன்னும் செய்யவில்லை. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி ஆபத்தான குழியை மூட விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்