சென்னை மாவட்டம், கொளத்தூர் வி.வி.நகர் முதல் தெருவில் மெட்ரோ தண்ணீர் செல்வதற்காக தோண்டப்பட்ட பள்ளம் ஒரு மாதமாக மூடப்படாமல் உள்ளது. இதனால், அப்பகுதியில் வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கையெடுத்து பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.