பரங்கிப்பேட்டை-கிள்ளை செல்லும் வழியில் வெள்ளாற்றை கடந்து செல்ல கட்டப்பட்ட பாலம் அருகே சாலை பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் சாலையை கடந்து செல்வதே வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.
