திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியம், பூலாங்குடி காலனி பகுதியில் சாலை வசதி இல்லாததால் மண் சாலையாக காணப்படுகிறது. இதனால் நேற்று பெய்த மழையின் காரணமாக இப்பகுதியில் உள்ள மண் சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி இருசக்கர வாகன ஓட்டிகள், முதியோர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.