குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-05-31 14:40 GMT

கரூர் மாவட்டம், அரசு காலனி வசந்தம் நகர் அருகில் மலை போல குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால் குழந்தைகள் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லுகின்றனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்