விருதுநகர் மாவட்டம் பனையடிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கண்டியாபுரம் கிராமத்தில் இருந்து அன்பின் நகரத்திற்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.