சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2023-05-24 13:28 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சாலையில் ஏராளமான கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இரவு நேரத்தில் சாலையில் படுத்துக் கொள்வதினால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாலையில் கால்நடைகள் படுத்திருப்பது தெரியாமல், அதன் மீது வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்