வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-05-24 08:19 GMT

காப்புக்காட்டில் இருந்து சடையன்குழி செல்லும் சாலையில் ஆடுதூக்கி பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாலையில் பதிக்கப்பட்டுடிருந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. தற்போது, அந்த இடத்தில் செடிகள் வளர்ந்து புதராக காட்சி அளிக்கியது. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் உடைப்பை சீரமைப்பதுடன், அங்கு வளர்ந்துள்ள செடிகளையும் அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வினு, குன்னத்தூர்.

மேலும் செய்திகள்