சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2023-05-21 07:35 GMT

சாலையை சீரமைக்க வேண்டும்

வாறுதட்டு பகுதியில் இருந்து தோப்புக்கு செல்லும் சாலையை நடுவிளாகம், மடத்துவிளாகம், மண்ணடி, பெருந்தோட்டம் உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை கடந்த ஆண்டு பெய்த கனமழையில் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-.பிரேம்ராஜ் வாறுதட்டு.

மேலும் செய்திகள்