பயணிகள் அவதி

Update: 2023-05-21 07:24 GMT

பயணிகள் அவதி

ஆற்றூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆற்றூர் ஜங்ஷனில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு இருந்தது. அது சேதமடைந்ததால் பேரூராட்சி நிர்வாகத்தால் இடித்து அகற்றப்பட்டது. அதன்பின் பயணிகளுக்கு எந்த வசதியும் செய்யவில்லை. இதனால் பஸ் ஏற வரும் பயணிகள் சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலையும், மழை பெய்தால் நனைந்து அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே புதிய நிழற்குடை அமைக்கப்படும் வரை தற்காலிக வசதி ஏற்படுத்தி கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அகஸ்டின், ஆற்றூர்.     



மேலும் செய்திகள்