கடலூர் சுப்புராயலு நகரில் உள்ள சிமெண்டு சாலை பலத்த சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வருகிறது. எனவே சிமெண்டு சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?