கடலூர் நேதாஜி சாலை பலத்த சேதமடைந்து பல்லாங்குழி போல காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் நத்தை வேகத்தில் நகர்ந்து செல்லும் நிலை உள்ளதால், கால விரையம் ஏற்படுகிறது. மேலும் இதனால் அடிக்கடி விபத்துகளும் அரங்கேறி வருகிறது. எனவே பல்லாங்குழி சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.