குண்டும், குழியுமான சாலை

Update: 2023-05-10 12:57 GMT
கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையத்தில் இருந்து கட்டிப்பாளையம் வழியாக திருக்காடுதுறை, கரைப்பாளையம் பகுதிக்கு செல்வதற்காக போடப்பட்ட சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் நடந்து செல்வோர் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனேவ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்