குண்டும், குழியுமான சாலை

Update: 2023-05-07 12:25 GMT

திருச்சி மாநகராட்சி 38-வது வார்டில் பாரிநகரிலிருந்து அண்ணாநகர் வழியாக காமராஜர் நகர் வரை செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் மழை காலங்களில் அந்த சாலை சேறும் சகதியுமாக மாறி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்