பள்ளத்தை சரி செய்ய வலியுறுத்தல்

Update: 2023-05-07 10:56 GMT
கரூர் மாவட்டம் நொய்யல்- வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் சொட்டையூலிருந்து புங்கோடை வரை பழுதடைந்த தார் சாலையை சீரமைத்து புதிதாக சாலை போடப்பட்டது. இந்நிலையில்முனிநாதபுரம் பகுதியில் தார் சாலை ஓரத்தில் உள்ள குடிநீர் தொட்டி அருகே நெடுகிலும் தார் சாலை ஓரத்தில் சீரமைக்கப்படாமல் பள்ளம், குழியாக உள்ளது. பகல் மற்றும் இரவு நேரத்தில் ஓரமாக செல்லும் வாகனங்கள் நிலை தடுமாறி செல்கின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் நெடுகிலும் பள்ளம், குழியுமாக இருப்பது தெரியாமல் இரு சக்கர வாகனத்தை விட்டு நிலைத்திடுமாறி குழிக்குள் விழுந்து செல்கின்றனர். இச்சம்பவம் தினமும் நடைபெற்று வருகிறது. எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தார் சாலை ஓரத்தில் நெடுகிலும் சீரமைக்கப்படாத உள்ள பகுதியை சீரமைத்து தொடர்ந்து விபத்து ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்