மாணவர்கள் அவதி

Update: 2023-05-07 07:24 GMT

மார்த்தாண்டத்தில் இருந்து மேல்புறம் செல்லும் சாலையில் வடக்கு தெரு உள்ளது. இந்த பகுதியில் பள்ளி-கல்லூரிகள் உள்ளன. இந்த சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்தன. ஆனால், சாலையை முறையாக சீரமைக்காமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிக்ள பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மாணவர்கள் பலர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். எனவே, சாலையை முறையாக சீரமைத்தும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெஸ்பின், சிராயன்குழி.

மேலும் செய்திகள்