கடலூர் ஸ்டேட் பேங்க் காலனியில் பன்றிகள் அதிக அளவில் சுற்றித்திரிகிறது. இவைகள் குப்பைகளை கிளறியும், சேற்றில் புரண்டும் எழுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
