வடலூர்-மருவாய் மற்றும் பின்னலூர்-சேத்தியாத்தோப்பு வரை சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டியது அவசியம்.