வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-05-03 12:10 GMT

நித்திரவிளை செல்லும் பிரதான சாலையில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. இந்த பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், மழை நேரங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருவதுடன், அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சதீஸ், சமத்துவபுரம்.

மேலும் செய்திகள்