சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2023-05-03 08:44 GMT

சேலம் மாவட்டம் எருமாபாளையம் அருகே ஒன்பதாம் பாலி டாஸ்மாக் - களரம்பட்டி செல்லும் சாலையில் சிறிது நேரம் மழை வந்தாலே மாதக்கணக்கில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசுத்தொல்லை அதிகமாவது மட்டுமல்லாமல் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் இந்த பகுதியை கடப்பதற்கு கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை புதுப்பிக்க முன்வரவேண்டும்.

மேலும் செய்திகள்