சாலையை ஆக்கிரமித்த முட்செடிகள்

Update: 2023-05-03 08:14 GMT

வாசுதேவநல்லூர் அருகே வெள்ளானைக்கோட்டை சிறுகுளத்து கரையில் இருந்து தாருகாபுரம் வரையிலும் சாலையின் இருபுறமும் சீமை கருவேல மரங்கள், புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்களை முட்செடிகள் பதம் பார்க்கின்றன. எனவே சாலையை ஆக்கிரமித்த சீமை கருவேல மரங்கள், புதர் செடிகளை அகற்றி, மக்களுக்கு பயனுள்ள மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்