வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூச கோரிக்கை

Update: 2023-04-30 12:15 GMT
கரூர் மாவட்டம் பாலத்துறை புகழூர் வாய்க்கால் அருகே வாகனங்கள் மெதுவாக சென்று தேசிய நெடுஞ்சாலையில் வழியாக செல்வதற்காக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக கரூர் பகுதியில் இருந்து பரமத்தி வேலூர் செல்லும் டவுன் பஸ்கள், ஈரோடு, கோவை, கொடுமுடி, காங்கேயம், அரவக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து பரமத்தி வேலூர், நாமக்கல், பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள், கார்கள், வேன்கள், டிராக்டர்கள்,இரு சக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் இரவு பகலாகசென்று வருகின்றன. இந்நிலையில் அங்கு போடப்பட்டுள்ள வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூசாமல் இருப்பதால் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகனங்கள் நிலைத்திடுமாறி செல்கின்றன. சில நேரங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி விழுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்