கடலூர் பஸ்நிலையம் அருகே பூ மார்க்கெட் செல்லும் சிமெண்டு சாலை பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மழைக்காலத்தில் அந்த சாலை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சிமெண்டு சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே மாநகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.