விளம்பர பலகையால் விபத்து

Update: 2023-04-26 12:27 GMT
பென்னாகரம்-தர்மபுரி பிரதான சாலையில், நாகதாசம்பட்டி பஸ் நிலையம் பகுதியில், சாலையோரம் விளம்பர பலகை உள்ளது. இது காற்று மழைக்கு சாலையில் சாய்ந்தபடி உள்ளது. இதனால் இந்த சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அதில் மோதி, சிறுசிறு விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் அந்த பலகைகள் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. எனவே சாலையோரம் விளம்பர பலகைகள் வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்