ஓலப்பாளையத்தில் ஆட்டோக்களால் விபத்து?

Update: 2023-04-26 11:37 GMT

ஓலப்பாளையத்தில் ஆட்டோக்களால் விபத்து?

காங்கயம்-வெள்ளகோவில் சாலையில் உள்ள ஓலப்பாளையத்தில் இருந்து உத்தம்பாளையம் செல்லும் சாலையில் சில ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோக்களை பைபாஸ் சாலையில் நிறுத்திக்கொள்கின்றனர். இதனால் சாலை ஓரத்தில் பொதுமக்கள் நிற்கின்றார்களா, அல்லது வாகனம் ஏதாவது வருகிறதா என பார்க்க முடியாத நிலை உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. தற்போது கண்ணபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவதால் வழக்கத்தை விட பொதுமக்கள், பக்தர்கள், வியாபாரிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் ஆட்டோ டிரைவர்கள் சாலையின் இருபுறமும் சாலை வளைவில் ஆட்டோக்களை நிறுத்தி வைத்துள்ளனர். எனவே ஆட்டோக்களை சாலை முனையில் விளைவில் நிறுத்தப்படுவதை காவல்துறையினர், போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும். ஆட்டோக்களை பயணிகளுக்கு இடையூறு இ்ல்லாத இடத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்ரீராமன்,ஓலப்பாளையம்.

9894522739

மேலும் செய்திகள்