விபத்தை ஏற்படுத்தும் தடுப்பு சுவர்

Update: 2023-04-23 07:34 GMT

கோழிப்போர்விளையில் இருந்து பள்ளியாடி சாலையில் தாமரைகுளமும் அதன் அருகில் சாலையோரத்தில் கால்வாயின் மேல் பாலமும் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் ஓரமாக சாலையின் உள்பக்கத்தின் விபத்து தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி விபத்து தடுப்புசுவரை சாலையில் வெளிபக்கமாக அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வினு, குன்னத்தூர்.

மேலும் செய்திகள்