அகலப்படுத்த வேண்டும்

Update: 2023-04-19 14:34 GMT

அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து சத்தி ரோட்டில் தீயணைப்பு நிலையம் வரை செல்லும் ரோட்டின் நடுவே வெள்ளை கோடு வரையப்பட்டு உள்ளது. இது இருசக்கர வாகனம் ஒதுங்கும் அளவுக்கு மட்டும் உள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது. இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கூடத்துக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் விபத்துகளை சந்தித்து வருகின்றனர். மேலும் ரோட்டோரம் மின்கம்பம் உள்ளதால் கனரக வாகனங்கள், லாரிகள் அவற்றின் மீது உரசிவிட்டு் செல்லும் அபாய நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி மிக விரைவாக சாலையை அகலப்படுத்த வேண்டும். இல்லையென்றால் ரோட்டின் நடுவே இருக்கும் சென்டர் மீட்டரை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்