தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஸ் நிலையம் அருகில் சில நாட்களாக சாலையின் நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பஸ்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எதிர்பாராத நேரத்தில் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். இதனை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணி, மாரண்டஅள்ளி, தப்மபுரி.