வேகத்தடை அமைக்கலாமே!

Update: 2023-04-16 16:58 GMT

சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஜலகண்டாபுரம் மெயின் ரோட்டில் ஆரூர்பட்டி பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. வேகத்தடைகள் எதுவும் இல்லை. இதனால் இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்பவர்கள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. ஆரூர்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து பனங்காட்டு மேடு வரை சாலையில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லை. இதனால் இந்த பகுதியில் இரவு நேரங்களில் செல்லும் பொது மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் வேகத்தடையும், மின்விளக்குகளும் அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்