சகதிக்காடான சாலை

Update: 2022-07-21 16:07 GMT

சகதிக்காடான சாலை

திருப்பூர் 46 வது வார்டு கல்லம்பாளையம் முதல் வீதியில் 100 குடும்பம் வசித்து வருகிறோம். 2 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எங்கள் வீதியில் பாதாள சாக்கடை மற்றும் குடி நீர் இணைப்புக்காக குழி தோண்டி திட்டம் அமல்படுத்தப்பட்டது. தற்போது பெய்து வரும் சிறிய மழை நாட்களில் வீதியில் மழை நீர் தேங்கி சகதிக்காடாகிறது. இதனால் பொது மக்கள, குழந்தைகள், வயதானவர்கள் நடக்கமுடியாமல் கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த வீதியை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. ஒரு சில நாட்களில் பருவமழை காலம் தொடங்க உள்ளதால் எங்கள் வீதியை சரி செய்து தர வேண்டும்.

விநாயகம், திருப்பூர், 95855 98318

மேலும் செய்திகள்