பொதுமக்கள் அவதி

Update: 2022-07-21 16:02 GMT

பொதுமக்கள் அவதி

திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் பாலசமுத்திரம் புதூர் ஊராட்சிக்குட்பட்ட கத்தாங்கண்ணியில் கடந்த 3 மாதங்களாக தரைமட்ட பாலம் வேலை நடந்தது. தற்போது பணிகள் முடிந்த நிலையில் அதற்கு மாற்றுப் பாதை அமைத்துக்கொடுத்த வழித்தடத்தில் 3 அடிக்கு மழைநீர் தேங்கி உள்ளதால் பஸ்கள் உள்ளே செல்ல முடியாத காரணத்தினால் கத்தாங்கண்ணி ரெட்டிபாளையம் ஆகிய இரு ஊர் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பஸ்சுக்காக காங்கயம் ரோட்டில் வந்து பஸ் ஏறி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதால், குழந்தைகளும் தாய்மார்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரமேஷ், கத்தாங்கண்ணி, 99427 81753

மேலும் செய்திகள்