சேதமடைந்த சாலை

Update: 2023-04-02 11:55 GMT

 ஆழ்வார்கோவிலில் இருந்து பள்ளிவிளை, வீரவிளை வழியாக தக்கலை செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையில் குழாய்கள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்ட பணிகள் நிறைவடைந்தது. ஆனால் சாலை முறையாக சீரமைக்கப்படவில்லை. இதனால், சாலை குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன் அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாகமணி, ஆழ்வார்கோவில். 

மேலும் செய்திகள்