கடலூர் பஸ் நிலையம் அருகே பூ மார்க்கெட் செல்லும் சிமெண்டு சாலை பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நத்தை வேகத்தில் செல்லும் நிலை உள்ளது. மேலும் மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக காணப்படுவதால், பஸ் நிலையத்திற்கு செல்லும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் புதிதாக சிமெண்டு சாலை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.