பாதுகாப்பு குறியீடு தேவை

Update: 2023-03-29 08:34 GMT

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் தக்கலை அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு சிகிச்சைக்காக சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். அவ்வாறு வரும் பொதுமக்கள் இந்த தேசிய நெடுஞ்சாலையை கடந்து மருத்துவமனைக்கு செல்வதற்குள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள், நோயாளிகள் நலன்கருதி அந்த பகுதியில் சாலையை கடந்து செல்வதற்கு வசதியாக பாதுகாப்பு குறியீடோ அல்லது சுரங்கப்பாதையோ அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மகேந்திரன், தக்கலை.

மேலும் செய்திகள்