சாலை புதிதாக போடப்படுமா?

Update: 2023-03-22 12:19 GMT
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் அமைந்துள்ளது திருவெள்ளறை. 108 திவ்ய தேசங்களில் முதன்மையான பெருமாள் கோவில். உலகில் வேறெங்கும் காணமுடியாத ஸ்வதிக் கிணறு ஆகியவை உள்ளது. இதனை பார்ப்பதற்காக திருச்சி மாவட்டம் மற்றும் தமிழகம் முழுவதில் இருந்தும் தினமும் பக்தர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். அவர்கள் அனைவரும் மண்ணச்சநல்லூரில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் திருவெள்ளரைக்கு முன்பாக ஒரு கிலோமீட்டர் தொலைவு கொண்ட யூனியன் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்து போக்குவரத்திற்கு ஏதுவாக இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் பக்தர்களின் வாகனங்கள் பஞ்சராகி விடுகின்றன. எனவே திருவெள்ளரையில் இருந்து திருச்சி செல்லும் ஒரு கிலோமீட்டர் தொலைவு கொண்ட யூனியன் சாலையை புதிதாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என பக்தர்கள் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் ஆகியோர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்