சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி தேர்நிலையத்தில் இருந்து ஊர்சாவடி செல்லும் சாலையில் தனியார் நகைகடை அருகே இருந்த வேகத்தடையை தைமாத தேர் திருவிழாவின் போது அகற்றி விட்டனர். இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களில் வேகமாக செல்கிறார்கள். இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே எடுக்கப்பட்ட வேகத்தடையை மீண்டும் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.