சேறும், சகதியுமான சாலை

Update: 2023-03-19 09:37 GMT

கோவை பெரியநாயக்கன்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இதன் காரணமாக அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மீது அந்த வழியாக செல்லும் வாகனங்கள் சேற்றை வாரி இறைத்து செல்லும் நிலை உள்ளது. இதனால் அவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே மழைநீர் தேங்காததை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்