விபத்துக்கு வழிவகுக்கும் குழி மூடப்படுமா?
பெருமாநல்லூர் பகுதிகளில், தனியார் நிறுவனத்தின் கியாஸ் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பெருமாநல்லூர் நால்ரோட்டில், குழாய் பதிக்கும் இடத்தில் குழாய் வழியே பவுடர் கலந்த நீரானது கடந்த 10 நாட்களாக வெளியேற்றி வருகிறது. இதனால் அப்பகுதியிலிருந்து நீர் வெளியேறி அப்பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. குழாய் பதிக்கும் பணிக்காக பெரிய அளவிலான குழியும் வெட்டப்பட்டுள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அனைத்துதரப்பினருக்கும் இடையூறாக உள்ளது. எனவே இந்த பணியை விரைந்து முடித்து, குழியை மூடி பாதையை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செந்தில், பெருமாநல்லூர்.
98422 44716