மண் குவியல் அகற்றப்படுமா?

Update: 2023-03-15 14:58 GMT
திருச்சி கல்லா தெருவில் உள்ள கழிவுநீர் வடிகால் கடந்த ஒரு வாரமாக தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும் இங்கு அரசின் சார்பில் சாலையில் குழி தோண்டப்பட்டது. இதனால் மண் குவிக்கப்பட்டது. இந்நிலையில், இங்கு தார்சாலை அமைக்கப்பட்ட பிறகும் குவிக்கப்பட்ட மண்ணை அகற்றவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்