விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2023-03-15 14:54 GMT

திருச்சி மாவட்டம், முசிறி-தா.பேட்டை சாலையில் உள்ள தும்பலம் கிராமத்தில் மெயின்ரோட்டில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் அருகே மாலை நேரங்களில் சிக்கன் உள்ளிட்ட உணவுகள் விற்கின்றனர். இதனை வாங்கி சாப்பிடுபவர்கள் கோழிக்கறியின் எலும்புகளை சாலையிலேயே தூக்கி வீசுகின்றனர். அதனை சாப்பிடுவதற்காக தெருநாய்கள் சுற்றுகின்றன. அப்போது அவை இருசக்கர வாகனத்தின் குறுக்கே விழுவதால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இதனை தடுப்பதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்