கடலூர் நேரு நகர் சாலை சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலை பள்ளத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் அரங்கேறி வருகிறது. எனவே சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.