வேகத்தடையில் வெள்ணை வர்ணம் பூசப்படுமா?

Update: 2023-03-08 13:31 GMT
அரியலூர் மாவட்டம், விளாங்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமம் கும்பகோணம், அணைக்கரை மற்றும் தா. பழூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மிகவிரைவில் சென்று விடாலாம். இதில், விளாங்குடியில் இருந்து கீழ விளாங்குடி வரை 5 வேகத்தடைகள் போடப்பட்டுள்ளது. இந்த வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூசப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கின்றன. மேலும் சாலையும், வேகத்தடையும் ஒரே மாதிரியே இருப்பதால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக 5 வேக தடைகளில் வெள்ளை நிற பெயிண்டும் மற்றும் சிவப்பு நிறப் பிரதிபலிப்பான்கள் ஒட்டி அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்