கிடப்பில் போடப்பட்ட சாலை பணிகள்

Update: 2023-03-08 12:15 GMT
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே செந்தட்டியாபுரம் புதூரில் இருந்து அருகன்குளம் வழியாக தென்மலை வரையிலும் புதிய சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இதற்காக பழைய சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டினர். பின்னர் புதிய சாலை அமைக்கும் பணிகளை நிறைவேற்றாமல் பணிகளை பல மாதங்களாக கிடப்பில் போட்டனர். இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலை அமைக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்