கம்மாபுரம் ஒன்றியம் பெரியாக்குறிச்சி 1-வது வார்டில் சாலை வசதி இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் ஆமை வேகத்தில் செல்லும் நிலை உள்ளது. மேலும் மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக மாறி விடுவதால், மாணவா்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் நடந்து செல்வதே பெரும் சிரமமாக உள்ளது. எனவே அப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.