குண்டும், குழியுமான சாலை

Update: 2023-03-01 12:08 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஒன்றியம், காட்டுநாவல் கிராமத்தில் இருந்து பெருச்சுவண்ணியம்பட்டி வரை உள்ள ஒன்றரை கிலோ மீட்டர் தார் சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்த நிலையில் புதிய தார் சாலை போடப்பட்டது. ஆனால் குறுகிய காலத்திலேயே பல்வேறு இடங்களில் சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வாகனங்களை இயக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கந்தர்வக்கோட்டை வருவதற்கு பல்வேறு கிராமங்களை இணைக்கும் பிரதான சாலை என்பதால் உடனடியாக சாலையில் பல்வேறு இடங்களில் ஏற்பட்டிருக்கும் பள்ளங்களை சரி செய்து சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்