அதிகரிக்கும் விபத்துகள்

Update: 2023-03-01 12:08 GMT

தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஆதனக்கோட்டை கடைவீதிக்குள் சென்று புதுகை தேசிய நெடுஞ்சாலையை அடையும் இருபக்கமும் வேகத்தடை இருந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்னர் புதிய தார்சாலை போடப்பட்டது. அப்போது வேகத்தடை அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவது பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வேகத்தடை இருந்தபோதே தேசிய நெடுஞ்சாலையில் மின்னல் வேகத்தில் செல்லும் வாகனங்களால் அதிக விபத்துகள் ஏற்பட்ட நிலையில் தற்போது வேகத்தடை இல்லாமல் இருப்பதால் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலையை அடையும் இருபக்கமும் வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்