தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2023-02-12 14:12 GMT

அரியலூர் முதல் செந்துறை வரை சாலை விரிவாக்கம் பணி கடந்த பல மாதங்களாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சாலை விரிவாக்கப் பணிகளினால் பல்வேறு விபத்துக்கள் நிகழும் அபாய நிலை உள்ளது. குறிப்பாக அரியலூர் குரும்பன் சாவடி முதல் தாமரைகுளம், ஓட்டக்கோவில் ஆகிய ஊர்களின் வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக ஆங்காங்கே சின்ன ஜல்லி கற்கள் சாலையில் போடப்பட்டுள்ளது. ஆனால் தார் சாலையாக இதுவரை மாற்றம் செய்யவில்லை. இந்த சாலை வழியாகத்தான் அங்குள்ள 2 சிமெண்டு ஆலைகளுக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றி செல்லும் லாரிகள் செல்லும்போது சாலை முழுவதும் புழுதி படலமாக காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை பார்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையில் புழுதி பறக்காமல் இருக்க லாரி மூலம் தண்ணீர் தெளிக்கப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்