உலர்ந்த மரம் அகற்றப்படுமா

Update: 2023-02-08 10:08 GMT




உலர்ந்த மரம் வெட்டி அகற்றப்படுமா...

குலசேகரம்-பேச்சிப்பாறை சாலையில் கான்வென்ட் சந்திப்பு அருகே சாலையோரத்தில் ஒரு முதிர்ந்த பலா மரம் முழுமையாக உலர்ந்த நிலையில் நிற்கிறது. இப்பகுதியில் கல்வி நிலையம், கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் வணிக வளாகம் உள்ளிட்டவை உள்ள நிலையில் எப்போதும் மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் இந்த மரத்திலிருந்து உலர்ந்த கிளைகள் காற்றில் ஒடிந்து விழுந்து வருகின்றன. இந்நிலையில் மரத்திலிருந்து பெரிய கிளைகள் கீழே விழுந்து விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்னர் நெடுஞ்சாலைத் துறையினர் மரத்தை வெட்டி அகற்ற முன்வர வேண்டும்.

இன்பராஜ்
தும்பகோடு
குலசேகரம்









மேலும் செய்திகள்